அரசியல்
பாம்புகளுக்கு
பால் வார்த்தவர்கள்
இன்று
அதன் சீற்றத்தின்
நடுவே
நடு நடுங்கி...
வெள்ளி, 8 அக்டோபர், 2010
உறக்கம்
விதைகளின்
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??
புதன், 7 அக்டோபர், 2009
தமிழினம்
தமிழனே!
கலங்குகிறது கண்கள்
எரியுது என் உள்ளம்
கைகள் தன்னிச்சையாக
உயருகின்றன உனக்கு
உதவிகள் செய்திட - ஏன்?
உதிரங்கள் ஒன்றல்லவா
ஆனால், பி(ப)ணம் தின்னும்
சில பிசாசுகள் எல்லைகள்!
வேறு வேறு எனக்கூறி
நம்மை பிரிக்கின்றனர்
அவர்களுக்கு புரியுமா
நாளை தானும்,தம் சந்ததியும்
மரணத்தை தழுவும் என்று
மரணமே அவர்களுக்கு
உனது வரவினை உணர்த்து...
திங்கள், 12 ஜனவரி, 2009
ஒற்றுமை
பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
ஞாயிறு, 4 ஜனவரி, 2009
வறுமை
தலைவர் பேசப்போகிறார்
என பறை சாற்றும்
வண்ண வண்ண சுவரொட்டிகள்
ஏ அரசியல்வாதிகளே
அந்த சுவரொட்டியை
ஒட்டும் பசையையாவது
தாருங்கள் - இந்த
ஏழைகள் பசியாரட்டும்
என பறை சாற்றும்
வண்ண வண்ண சுவரொட்டிகள்
ஏ அரசியல்வாதிகளே
அந்த சுவரொட்டியை
ஒட்டும் பசையையாவது
தாருங்கள் - இந்த
ஏழைகள் பசியாரட்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)