புதன், 7 அக்டோபர், 2009

தமிழினம்

தமிழனே!

கலங்குகிறது கண்கள்

எரியுது என் உள்ளம்

கைகள் தன்னிச்சையாக

உயருகின்றன உனக்கு

உதவிகள் செய்திட - ஏன்?

உதிரங்கள் ஒன்றல்லவா

ஆனால், பி(ப)ணம் தின்னும்

சில பிசாசுகள் எல்லைகள்!

வேறு வேறு எனக்கூறி

நம்மை பிரிக்கின்றனர்

அவர்களுக்கு புரியுமா

நாளை தானும்,தம் சந்ததியும்

மரணத்தை தழுவும் என்று

மரணமே அவர்களுக்கு

உனது வரவினை உணர்த்து...

திங்கள், 12 ஜனவரி, 2009

ஒற்றுமை

பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
சூரியனே - நீ
அஸ்தம்பிக்கும் போது
நான் விழித்துக்கொள்கிறேன்
என்னவளின்
மனதைப்போல...

அரசியல் திருடர்கள்

ஏ சூரியனே
நீ கூட இவர்களுக்கு
பயந்துதான்
இரவு எனும்
போர்வையில் ஒளிந்து
கொள்கிறாயோ...

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

வறுமை

தலைவர் பேசப்போகிறார்
என பறை சாற்றும்
வண்ண வண்ண சுவரொட்டிகள்
ஏ அரசியல்வாதிகளே
அந்த சுவரொட்டியை
ஒட்டும் பசையையாவது
தாருங்கள் - இந்த
ஏழைகள் பசியாரட்டும்

வரம் தா

பறவைகளே
உங்களது சிறகுகளை
கொஞ்சம் தானமாக
தாருங்கள் - உலகை
சுற்றி வர ஆசை
இந்த ஏழகளுக்கு