திங்கள், 12 ஜனவரி, 2009

ஒற்றுமை

பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக